Latest News

தொடரும் ஈபிடிபியின் அடாவடி! கிளி.கச்சேரி அனர்த்த முகாமைத்துவப் பிரிவில் இருந்த பொருட்கள் பறிப்பு

தொடரும் ஈபிடிபியின் அடாவடி! கிளி.கச்சேரி அனர்த்த முகாமைத்துவப் பிரிவில் இருந்த பொருட்கள் பறிப்பு



கிளிநொச்சி கச்சேரியின் அனர்த்த முகாமைத்துவப் பிரிக்கேயுரித்தான பொருட்களை ஈபிடிபியினர் அடாவடியாக கையகப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று பிற்பகல் 5.10 மணியளவில் ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் வட மாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் மனோகரன் ஆகியோர் தமது பிரத்தியேக வாகனங்கள் மூன்றிலும் உழவியந்திரத்துடனும் வலுக்கட்டாயமாக உத்தியோகத்தர்கள் எல்லோர் முன்னிலையிலும் பொருட்களை தமது வாகனங்களில் ஏற்றிய நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.
பொதுமக்களுக்காக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வழங்குவதற்கு வைத்திருந்த பொருட்களையே சந்திரகுமார். குழுவினர் தம்கையகப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்க அதிபர் ரூபாவதி கேதிஸ்வரன் தான் தேர்தல் கடைமைகளில் அவசரமாக ஈடுபடுகின்றவராக தன்னைக்காட்டி மறைமுகமாக இவர்களின் செயல்களுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Slider[Style1]

Sponsor

Flickr Images

Featured Video

Pages

Video Of Day

webapp Designed by webseotrix Copyright © 2014

Theme images by Bim. Powered by Blogger.